districts

காவல் வாகன போலீஸ் ஸ்டிக்கரை அகற்ற டிஜிபி உத்தரவு

சென்னை,ஜூலை 19- காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 2012 ஆம் ஆண்டு இந்திய அரசு அரசாணை ஒன்று வெளியிட்டது. அதில் கருப்பு ஸ்டிக்கர்களை நான்கு சக்கர வாக னங்களில் பயன்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படையாக வைத்து, கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் காவல் துறை உயர் அதி காரிகள் பயன்படுத்தும் வாகனங்களி லும் கருப்பு ஸ்டிக்கர் பயன் படுத்தக் கூடாது எனவும், போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காவலர்கள் தனிப்பட்ட வாகனத்தில் பயன்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை அடிப்படை யாக வைத்து தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் அலுவலக வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டக்கூடாது எனவும், காவலர்கள் தங்கள் சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களில் போலீஸ் என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை காட்சிப் படுத்தும் வகையில் பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அலுவலக ரீதியாக பயன்படுத்தப்படும் வாக னங்களில் மட்டுமே போலீஸ் என்ற போர்ட் மற்றும் ஸ்டிக்கர் பயன் படுத்த வேண்டும் என அவர் தெரி வித்துள்ளார். எனவே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்துறை ஆணை யர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் பணி புரியும் காவலர்கள் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் போர்ட் அல்லது ஸ்டிக்கர் பயன்படுத்தி வந்தால் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவுறுத்துமாறு தமிழ்நாடு டிஜிபி தெரிவித்துள்ளார்.இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும், உத்தரவை பின்பற்றியது தொடர் பான அறிக்கையை சமர்ப்பிக்கு மாறு காவல்துறை உயர் அதிகாரி களுக்கு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.