districts

போட்டி தேர்வு: காஞ்சிபுரத்தில் இலவச பயிற்சி வகுப்பு

சென்னை, செப்.1  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன.  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும்  தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி-1 பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த தேர்வுகளுக்கு தயாராகும்  போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்  சார்பில் செப்.1 தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக  பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித் தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில்  தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.