விழுப்புரம், பிப். 7- கொளப்பாக்கம் பழங்குடி இருளர் இன மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளை ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம் ஊராட்சி யில் உள்ள தேங்காய் பாக்கம் கிரா மத்தில் பழங்குடி இருளர் இன மக்கள் வசிக்கின்றனர். அந்த குடியிருப்பு பகுதிகளை மாவட்ட ஆட்சியர் மோகன் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார், அப்போது அவர்கள் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்றும், அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.