சிதம்பரம், மார்ச் 27 - சிதம்பரம் சீர்மிகு நகரமாக மாற்றப்படும் என்ற வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சிதம்பரம் நகரத்தை சீர்மிகு நகரமாக மாற்றிட தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்குத் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிதம்பரம் வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ்குமார், மூசா (ஓட்டல் வியாபாரிகள் சங்கம்), ராமநாதன் (நகை வியாபாரிகள் சங்கம்), மூத்த வழக்கறிஞர் சம்பந்தம், வீனஸ் பள்ளி குழுமத்தின் தாளாளர் வீனஸ்குமார் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர். அமைச்சர் பேசுகையில், சிதம்பரம் நகரத் தில் உள்ள சாலைகள், மின்விளக்குகள், பாதாளசாக்கடை திட்டம், குடிநீரில் சாக்கடை கலப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண கோர்கால அடிப்படையில் நடவடி க்கை எடுக்கப்படும். நகரின் மையத்தில் உள்ள பேருந்து நிலையம், புறவழிச்சாலை பகுதி யில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். சிதம்பரம் அண்ணாமலை நகர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ. 127 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடை பெற்று வருவதாக தெரிவித்த அமைச்சர், புளிச்சமேடு சுடுகாட்டை மின்தகன மேடை வசதி கொண்டதாக மாற்ற நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என்றார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பால சுப்ரமணியம், கூடுதல் ஆட்சியர்கள் ரஞ்சித் சிங், பவன்குமார் கிரியப்பனார், கோட்டாட் சியர் ரவி, நகர் மன்றத் தலைவர் செந்தில் குமார், துணைத்தலைவர் முத்துகுமரன், நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.