districts

சென்னை, புறநகர் ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள்

சென்னை, பிப். 12- தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணி கள் டிக்கெட் எடுத்து கொள் ளும் வசதியினால் இனி டிக்கெட் எடுக்க பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் கவுன்டரில் காத்திருக்கத் தேவையில்லை. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: ரயில்வே பயணிகள் டிஜி ட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் வசதியை விரிவுப்படுத்தி வருகிறோம். அதன்படி, க்யூ ஆர் கோடு மூலம் ஏடிவிஎம் (தானி யங்கி டிக்கெட் இயந்திரங் கள்) டிக்கெட், நடைமேடை கட்டணம் உள்ளிட்டவற்றை பெறலாம். சீசன் டிக்கெட்டு கள் மற்றும் ஸ்மார்ட் கார்டு களையும் புதுப்பித்துக் கொள்ளும் வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டார்ட் கார்டு,  பிஎச்எம் யுபிஐ க்யூ ஆர் கோடு, பேடிஎம், பிஎச்எம் யுபிஐ கோடு வழியாகவும் கட்டணம் செலுத்தலாம். இதற்கான முழு விளக்கத் தையும் தானியங்கி டிக்கெட்  இயந்திரங்களின் திரையில் காணும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. மேலும், தகவல்களைப் பெற 139 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். க்யூ.ஆர். முறையில் டிக்கெட் பெறுவோருக்கு 0.5 விழுக்காடு கட்டண  சலுகையும் அளிக்கப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.