விழுப்புரம், டிச.14- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி யிலுள்ள ராஜா தேசிங்கு கோட்டையை சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தின் கலைத்திறன் மிக்க கோட்டையாக விளங்குவது செஞ்சிக் கோட்டையாகும். பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்துக்கு இணையாக செஞ்சிக்கோட்டை விளங்கி வருகிறது. கடந்த 9ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தென்னிந்தியாவின் பெரிய நகரங்க ளில் ஒன்றாக இருந்த செஞ்சியை தலை மையிடமாக கொண்டு ‘கோனார்’ வம்சத்தினர் ஆட்சி செய்து வந்தனர். இதையடுத்து, 12ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்கை எழிலும், நீர் வளமும் நிறைந்த 3 மலைகளையும், 2 சிறிய குன்று களையும் இணைத்து செஞ்சி கோட்டையை ஆனந்த கோனார் கட்டி னார். கோனார் வம்சத்தினத்தை தொடர்ந்து விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்களும் கோட்டையை சுற்றி பெரிய மதில் சுவரையும் அதை சுற்றி நீர் நிரம்பிய அகழிகளையும் அமைத்து வலுவான கோட்டையாக மாற்றினர். இங்கு ஆண்டு கணக்கில் போர் நடந்தாலும், கோட்டையை முற்று கையிட்டாலும், உள்ளே இருந்தே போர் புரியும் வகையில் இடம் மற்றும் போர்க்கருவிகள் தயாரிக்கும் வசதிகள் சிறந்த கட்டிடக்கலை நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர மூலிகை காடுகள், வற்றாத நீர் நிலைகள், விவசாயம் செய்ய பெரும் நிலப்பரப்பு உள்ளிட்டவையும் உள்ளது. மேலும் கோட்டைக்குள் கலை நயம் மிக்க கல்யாண மகால், குதிரை லாயம், தர்பார் மண்டபம், அரண்மனை பகுதி, வெங்கட்ரமணர் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில் என அனைத்தும் உள்ளன.
பல்வேறு மன்னர்களால் சீரமைக்கப்பட்டு, பாது காக்கப்பட்டு இயற்கை சீற்றங்களை யும் கடந்து இன்றளவும் கம்பீரமாக நிற்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய கற்க்கோட்டைகளில் ஒன்றாக செஞ்சி கோட்டை விளங்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியா வில் அதிகமாக கண்டு களித்த இடங்களில் 4ஆவது இடத்தை செஞ்சிக்கோட்டை பிடித்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய பெருமையை மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வும், செஞ்சி கோட்டையை அழியா மல் காக்கவும் தமிழக அரசு செஞ்சிக் கோட்டையை சுற்றுலாத் தலமாக அறிவித்து, அதற்குரிய நிதியை ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், வரலாற்று ஆய்வாளர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.