districts

கொதிக்கும் சாம்பார், டீ, காபியை பிளாஸ்டிக் கவரில் வாங்குவதா? பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா வேதனை

சென்னை, நவ. 11- உயர் நீதிமன்ற வளாகமும் பிளாஸ்டிக் இல்லாத மஞ்சப்பையுடன் கூடிய பசுமை சூழலுக்கு மாற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரங்களை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார். உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 5 இடங்களில் அமைக்கப்படவுள்ள மஞ் சப்பை வழங்கும் திட்டத்திற்கான நிகழ்ச்சி யில் தமிழக சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர்  ஜெயந்தி முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை துவக்கி வைத்து பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா பேசுகை யில், 1907ஆம் ஆண்டு பெல்ஜியத்தில் பிளா ஸ்டிக்கை கண்டுபிடித்தபோது உலகமே வரவேற்றதாகவும், 115 ஆண்டுகளுக்கு பிறகு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதுதான் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். நீர்நிலை, சுற்றுச்சூழல், வனம், கடல் அனைத்தும் பிளாஸ்டிக்கினால் மாசடைந்து, உலகமே பிளாஸ்டிக் குப்பைத்தொட்டியாக மாறி விட்டதாகவும், கால்நடைகள் கூட பிளாஸ்டி க்கை உண்ணும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், புற்றுநோயை உருவாக்கும் பிளாஸ்டிக் கவரில் கொதிக்கும் சாம்பார் மற்றும் டீ  வாங்குவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். பிளாஸ்டிக்கின் தீமையை உணர்ந்த சிக்கிம் அரசு கடந்த 1998ஆம் ஆண்டே அதற்கு தடை விதித்துள்ளதாகவும், இங்கி லாந்து, எத்தியோப்பியா, உகாண்டா போன்ற  நாடுகளை போல நாமும் பேரழிவை தரும் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். உயர் நீதிமன்ற வளாகமும் பிளாஸ்டிக் இல்லாத மஞ்சப்பையுடன் கூடிய பசுமை சூழலுக்கு மாற வேண்டும் என பொறுப்பு தலைமை நீதிபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.