districts

மலக்குழி மரணங்களை தடுக்க அண்ணா பல்கலை.யில் துப்புரவு பொறியியல் துறையை தொடங்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 28 - மலக்குழி விஷவாயு மரணங்களை தடுக்க அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை தொடங்க கோரி திங்களன்று (மார்ச் 27) சைதாப்பேட்டையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலக்குழி, பாதாளச் சாக்கடை களை தூர்வார ஐஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளை சோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், வெளி நாடுகளில் இருந்து தகுதியான இயந்திரங்கள், கருவிகளை இறக்கு மதி செய்து பயன்படுத்த வேண்டும், எஸ்சி,எஸ்டி மக்கள் தொகைக்கு ஏற்ப, துணை திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி முன்ன ணியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
நாகை மாலி
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் நாகை மாலி, அறிவியல் கண்டுபிடிப்புகள் சமூக கட்டமைப்பில் பல மாற்றங்களை உருவாக்கி உள்ளது. விவசாயத்தில் உழுவதற்கு, விதைப்பதற்கு, களை எடுப்பதற்கு, அறுவடை செய்வதற்கு என கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. விவசாய தொழிலாளர்களே இல்லாமல் விவ சாயம் செய்யும் நிலை உருவாகி உள்ளது. எனவே, மலக்குழி, பாதாள சாக்கடைகளை தூர்வார புதிய கருவிகளை உருவாக்குவது, அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய துறையை ஏற்படுத்துவதும் பெரிய காரியமல்ல. ஆனால் ஆட்சியாளர்கள் எளிதில் செய்ய மாட்டார்கள். தொடர் போராட்டங்கள் நடத்துவதன் மூலமே வெற்ற பெற முடியும் என்றார். வாழ்வாதாரமான இந்த தொழிலில் இருந்து மாற்றுத் தொழிலுக்கு தொழிலாளர்கள் எளிதில் செல்ல முடியாது. இந்த கோரிக்கையை சட்டமன்றத்தில் வலுவாக எழுப்புவ தோடு, முதலமைச்சரின் கவ னத்திற்கும் கொண்டு செல்வோம். இந்த கோரிக்கை நிறைவேறும் வரை மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
சாமுவேல்ராஜ்
முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல் குறிப்பிடுகையில், தமிழகத்தில் வேகமாக நகர்மயமாதல் நிகழ்கிறது. அதன் காரணமாக மலக்குழி விஷவாயு மரணங்கள் நிகழ்கின்றன. இதை தடுக்க அரசு கவனம் செலுத்த மறுக்கிறது. துப்புரவு பணி சாதியோடு சம்பந்தப் பட்டுள்ளதால் பாதாள சாக்கடை, மலக்குழிகளை தூர்வார ஐஐடி கண்டுபிடித்த கருவியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் உள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், விஷவாயு உள்ளதா என்பதை அறிய சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடு களில் பயன்படுத்தப்படும் எச்சரிக்கை கருவிகளை இறக்குமதி செய்ய அரசு மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். பழனி, திருச்செந்தூர் கோவில் விழாக்களின் போது, திறந்த வெளியில் மலம் கழிக்கின்றனர். இந்த பகுதிகளை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களை சிறப்பு பணி என அழைத்து சென்று, மலத்தை அள்ள வைக்கின்றனர். இதை அரசு தடுக்க வேண்டாமா? என்று கேட்ட அவர், இதற்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிக்க ஒரு கோடி ரூபாய் கூட தேவைப்படாது. ஆனால் அதனை அரசு செய்ய மறுக்கிறது என்றார். வீட்டில் இருப்பவர்களே கழிப்பிடங்களில் அடைப்பு ஏற்பட்டால் சுத்தம் செய்யும் வகையில் அரசு கருவிகளை உருவாக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் அண்ணா பல்கலைக்கழகத்தில் துப்புரவு பொறியியல் துறையை உரு வாக்காவிடில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியே துப்புரவு பொறியியல் பட்டறையை உருவாக்கும் என்று சாமுவேல்ராஜ் கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டத் தலைவர் ச.லெனின் தலைமை தாங்கினார். விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு, ஆதித்தமிழர்கட்சி தலைவர் கு.ஜக்கையன், ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் கோவை ரவிக்குமார், வழக்கறிஞர் சரவணன், சபாய் கரம்சாரி அந்தோலன் நிர்வாகி டி.சாமுவேல், முன்னணியின் மாநில செயலாளர் கா.வேணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே.மணிகண்டன் உள்ளிட்டோர் பேசினர்.