சென்னை, ஜன.8- சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் காவல் துறையினர் மத்தியில் கொரோனா தொற்று அதி கரித்துவருகிறது. இதையடுத்து தாம்பரம், ஆவடி மாநகர பகுதியிலும் காவல்துறையினர் மிகுந்த எச்சரிக்கையுடன் பணி யாற்றும்படி ஆணையர்கள் ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி) ஆகி யோரும் அறிவுறுத்தி இருக் கிறார்கள். காவல்துறையினர் பொ துமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களில் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். உயர்நீதிமன்ற உதவி ஆணையர் மாரியப்பன், ஆணையர் கணேஷ் பாண்டி யன், எஸ்பிளனேடு காவல்நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமை ப்படுத்த ப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே கொரோனா 2-வது அலையின் போது போலீஸ் துறை சில உயிரி ழப்புகளையும் சந்தித்தது. இப்போதும் நோய் தொற் றுக்கு பலர் ஆளாகி வரு வதால் பணியின் போது எச்சரிக்கையுடன் பணி யாற்றும்படி ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார். பொது மக்கள், வாகன பயணிகளை விசாரிக்கும் போது உரிய இடை வெளியில் நின்று விசாரிக்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிந்திருக்காவிட்டால் முதலில் மாஸ்க் அணிய வைத்து விட்டு அதன் பிறகு பேச வேண்டும். குடிபோ தையை பரிசோதிக்கும் போதும் ஊதுகுழாயை கை யாளும் போதும் கவனம் தேவை. எல்லொரும் கை யுறை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.