districts

அம்மா உணவக ஊழியர்கள் நீக்கம்

சென்னை, டிச. 6- சென்னை மாநகராட்சி  மூலம் 400 அம்மா உணவ கங்கள் நடத்தப்படுகின்றன. இதில் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் பெண்கள் சமையல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  4 ஆயிரத்திற்கும் மேற் பட்ட பெண் ஊழியர்கள் 2 ஷிப்டு முறையில் பணி புரிந்து வருகின்றனர். நஷ்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் விற்பனையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 60  வயதை கடந்த பெண் ஊழி யர்கள் அம்மா உணவ கத்தில் தொடர்ந்து பணி யாற்றி வருவது தெரிய வந்தது. அவர்களை பணி யில் இருந்து நீக்கம் செய்ய மாநகராட்சி முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. சுயஉதவி குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள வர்களுக்கும் வயது வரம்பு  18 முதல் 60 வரை நிர்ணயிக் கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 60 வயதை கடந்தவர்கள் எத்தனை பேர் பணி செய்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்திய தில் 131 பேர் என தெரிய வந்தது. அவர்கள் அனை வரையும் கடந்த 1-ந்தேதி முதல் பணியில் இருந்து நீக்கவும் செய்துள்ளனர். இதனால் காலி இடங்கள் ஏற்படும் பட்சத்தில் அதனை நிரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.