சென்னை, ஜூன் 2- சென்னை விமான நிலை யத்தில் தங்கம், போதைப் பொருள், வெளிநாட்டு பணங்கள் கடத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. இதில் தங்கம் கடத்தல் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் ரூ.70.12 கோடி மதிப்புடைய 157.75 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. அதேபோல் சென்னை விமான நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டில் ரூ.181.51 கோடி மதிப்புடைய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் அதிகபட்சமாக ரூ.170 கோடி மதிப்புடைய 25.44 கிலோ ஹெராயின் ஒரே நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்டன.மொத்தம் 234 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,144 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 5இல் ஒரு பகுதியினர் பெண் கடத்தல்காரர்கள். அதேபோல் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டு பணம், கணக் கில்லாத ஹவாலா பணம் கடத்த லும் அதிகமாக நடக்கின்றன. கடந்த 2021-ஆம் ஆண்டில் வெளி நாட்டு பணம் பறிமுதல் வழக்கு கள் 43 பதிவாகி உள்ளன. அதில் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.10.42 கோடி மதிப்புடைய வெளிநாட்டுப் பணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.