districts

img

உலக பாரம்பரிய தினம்: மாமல்லபுரத்தில் கண்காட்சி

செங்கல்பட்டு, ஏப். 18- உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை மாமல்லபுரத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வருங்கால தலைமுறைக ளுக்கு நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அதன் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டியது கடமை என்றார்.  மாமல்லபுரத்தில் தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 3 பேட்டரி கார் வாகன வசதியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் பார்வைக்காக  இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் திறந்திருக்கும்.