districts

img

ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய மாதர் சங்கத்தினர் கைது

செங்கல்பட்டு, நவ.24- கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாதர் சங்கத்தினரை செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினர்  வழியில் மடக்கி கைது செய்தனர். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாதர் சங்கத்தினர் வாகனம் மூலம் வியா ழனன்று (நவ 24) சென்னையை  நோக்கி  சென்றனர். அப்போது செங்கல்பட்டு மாவட்டம், தொழுப்பேடு சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து போராட்டத்திறகு மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கீதா தலைமையில் சென்ற 25 பேரை கைது செய்து அச்சிறுப்பாக்கம் சமுதாயக் கூடத்திலும்,  விழுப்புரம் மாவட்டம் வானூரில் இருந்து மாவட்டத் தலைவர் தமிழ்செல்வி தலை மையிலும், கள்ளக்குறிச்சி மாவட்ட பொரு ளாளர் லூயிசா மேரி தலைமையில் சென்ற 41 பேரை செங்கல்பட்டு தனியார் மண்ட பத்தில் காவல்துறையினர் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வர்களை மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வாசுதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.