செங்கல்பட்டு, பிப். 20- நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 55.30 விழுக்காடு வாக்குப்பதிவு நடை பெற்ற உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர், நந்திவரம்- கூடுவாஞ் சேரி ஆகிய 4 நகராட்சிகளுக்கும், கருங்கோழி, அச்சிறுபாக்கம், இடைக்கழிநாடு, மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 6 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் என மொத்தமாக 277 வார்டு உறுப்பி னர் பதவிக்கு திமுக, அதிமுக, மார்க்சி ஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி களைச் சேர்ந்த 1607 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 5,23,823. பெண் வாக்காளர்கள் 5,43,825, மூன்றாம் பாலினத்தவர்கள் 114, என மொத்தம் 10,76,762 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 6,06,387 வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியி 79.81, கருங்குழி பேரூராட்சி 83.43, இடை க்கழிநாடு பேரூராட்சி 80.13, திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 80.55, திருப்போரூர் பேரூராட்சி 80.21, மாமல்லபுரம் பேரூராட்சி 80.84, செங்கல்பட்டு நகராட்சி 60.30, மதுராந்தகம் நகராட்சி 75.78, நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சி 54.41, மறைமலைநகர் நகராட்சி 66.79, தாம்பரம் மாநகராட்சி 49.98 விழுக்காடுகள் என மாவட்டத்தில் நடை பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 55.30 விழுக்காடு வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. வாக்குகள் பதிவான இயந்திரங் கள் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு காவல்துறையினர் பாதுகாப்புடன் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக் கழுக்குன்றம், மறைமலை நகர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக் கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்க ளுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.