மதுராந்தகம், ஜூன் 09 - செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம் சிலாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட ஒழுப்பாக்கம் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத் திற்குட்பட்ட பாக்கம், ஒழுப்பாக்கம், சிலாவட்டம், மேல் சிலாவட்டம், சிறு களத்தூர், கூடலூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய காலம் தாழ்த்தும் மைய அதிகாரிகள், இரவு நேரங்களில் வியாபாரிகளிட மிருந்து நெல்லை முறைகேடாக கொள்முதல் செய்வதாக விவசாயி கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து கூடலூர் கிராமத்தை சார்ந்த விவசாயி ஆண்டவனிடம் கேட்டபோது, கடந்த மாதம் நூறு மூட்டை நெல் கொண்டு வந்தேன். ஆனால் இதுவரை என்னுடை நெல்லை கொள்முதல் செய்யவில்லை. இதேபோன்று பல விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல்லை கொள்முதல் நிலை யத்தில் கொட்டி வைத்து காத்திருக் கின்றனர் என்றார். ஆனால் கொள்முதல் மைய பணியாளர்களும் அதிகாரிகளும் விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். விவசாயிகள் கொட்டிவைத்த நெல் அப்படியே இருக்கும் போது கொள்முதல் செய்த மூட்டைகள் அதிகரித்து காணப்படுவது எப்படி என்றும் அவர் வினவினார்.
மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு நெல்லை கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார். இதேபோன்று பாக்கம் கிரா மத்தை சார்ந்த ருத்தர கோட்டியிடம் கேட்ட போது கடந்த மாதம் 7ம் தேதி அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் என்னிடம் 112 மூட்டை நெல்லை கொள்முதல் செய்தனர். ஆனால் இன்றுவரை அதற்கான பணம் வந்து சேரவில்லை. ஐந்து சவரன் நகையை அடமானம் வைத்து விவசாயம் செய்தேன். பணம் வராததால் நகைக்கு வட்டி கூட கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று வேதனையுடன் தெரிவித்தார். இதுகுறித்து கொள் முதல் நிலைய அலுவலர் ஜெயராணியிடம் கேட்டபோது இரவு நேரங்களில் வியாபாராரிகளிடம் நெல்லை கொள்முதல் செய்வதாக கூறுவது தவறான தகவல். முறையாகவே விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் இது வரை விவசாயிகளிடமிருந்து 17 ஆயிரம் மூட்டை வரை நெல் கொள் முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 7 ஆயிரம் மூட்டை நெல் குடோனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யாத தால் 10 ஆயிரம் மூட்டை தேக்க மடைந்துள்ளது. இதனால் இடப்பற் றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் சிலருக்கு பணம் போய் சேவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது. தற்போது அவர்களுக்கு பணம் வங்கியில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது என்றார்.
மேலும் இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் சுரேஷிடம் கேட்டபோது மாவட்டத்தில் 94 நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள்அமைக்கப்பட்டு இதுவரை விவசாயிகளிடமிருந்து சுமார் 1.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரவித்துள்ளார். இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக மேலாளரிடம் கேட்ட போது விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி முடியும் தருவாயில் உள்ளது. ஓரிரு நாட்களில் முழுமையாக கொள்முதல் செய்யப்பட்டு நிலையங்கள் மூடப்பட உள்ளன. இரவு நேரங்களில் நெல் கொள்முதல் செய்வதற்கு வாய்ப் பில்லை இருப்பினும் குற்றச்சாட்டு கள் வருமோயானால் உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்றார்.