செங்கல்பட்டு, மார்ச் 16 – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ள தாக மாவட்ட ஆட்சியர் ஆ.ரா. ராகுல்நாத் தெரிவித் துள்ளார். இதற்காக அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் மார்ச் 18ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. இம்முகா மில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை அடையாளம் காணப்பட்டு பள்ளியில் சேர்க்கப்படுவர். மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளும் வழங்கப்படும். மேலும் இம்மருத்துவ கணிப்பு முகாம்கள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். அந்தந்த பகுதியில் இதுவரையில் தேசிய அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிக ளும் (0-18 வயது) இந்த முகாமில் கலந்துக் கொள்ள லாம். மருத்துவக் குழுவினரின் பரிசோதனைகளுக்குப் பின் அன்றைய தினமே மாற்றுத் திறனாளிகளுக்கான அடை யாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். புகைப்படம் -4, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் -2, ஆதார் அட்டை நகல் -2 உள்ளிட்ட ஆவணங்களுடன் முகா மிற்கு வரவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.