districts

img

பெண்கள் மீதான இணைய வழி தாக்குதல்: செங்கல்பட்டில் கருத்தரங்கம்

செங்கல்பட்டு, மார்ச் 10- செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சார்பில் இன்றைய உலகில் இணையவழிக் குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு எதி ரான இணையவழி தாக்கு தல் சம்மந்தமான சிறப்பு கருத்தரங்கம் ஆட்சியர் அரங்கில் வெள்ளியன்று (மார்ச் 10) நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மரு.பிரதீப் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு, மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளர் பரத் ஆகியோர் பெண்கள் மீது இணைய வழியில் நடைபெறும் தாக்குதல்கள் குறித்தும் பாதுகாப்பு குறித்தும் பேசி னர். விஐடி கல்லூரியின் இணை பேராசிரியர் முனை வர்.வள்ளிதேவி, வழக்கறி ஞர் ஸ்ரீநாத் இரா.ஐயங்கார்,  இன்போசிஸ் மேலாளர், கே.அனிதா குமாரி உள் ளிட்ட பலர் இதில் பங்கேற்ற னர்.