districts

மதுராந்தகத்தில் பிஎஸ்என்எல் சேவை முடக்கம்

செங்கல்பட்டு, டிச.9- மாண்டஸ் புயல் காரணமாக மதுராந்தகம் பகுதியில் ஏற்பட்ட மின் தடையால் பிஎஸ்என்எல் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே புயல் கரையை கடந்தது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து மதுராந்த கம், செய்யூர் வட்டத்தில் உள்ள பிஎஸ்என்எல் சேவை மையங்கள் இருளில் மூழ்கின. இம்மையங்களில் உள்ள மின் ஜெனரேட்டர்கள் செயல்படாததால் இப்பகுதியில் முற்றிலுமாக பிஎஸ்என்எல் சேவை முடங்கியது.  புயலால் பாதிக்கப்பட்ட  மக்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலைஏற்பட்டது. பல்வேறு இடங்களில் மரங்கள், சாலை மற்றும் குடியிருப்பு பகுதி களில் விழுந்த நிலையில் இத்தகவல் களை மாவட்ட நிர்வாகம் கொடுத்தி ருந்த அவசர எண்ணுக்கு தெரி விப்பதில் சிரமம் ஏற்பட்டது.  இந்நிலையில் பிஎஸ்என்எல் சேவை மையம் மற்றும் டவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் உள்ள ஜெனரேட்டர்கள் பராமரிக்கப் படாமல் இருந்ததால் பிஎஸ்என்எல் சேவை முடக்கப்பட்ட நிலையில் இது போன்ற பேரிடர் காலங்களில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முடி யாத நிலை ஏற்படுவதாகவும்  மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.