பெரம்பலூர்/அரியலூர், பிப்.13 - சென்னை குடியரசு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் அனைத்து மாவட்ட பொது மக்களுக்கும் காட்சிப்படுத்த வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சர் உத்தர வின்படி வ.உ.சி. அலங்கார ஊர்தி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு பிப்.12 அன்று வந்தது. அலங்கார ஊர்திகளின் வர வேற்பு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள குன்னத் தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா, மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் எஸ்.மணி, பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் சி.ராஜேந் திரன், வருவாய் கோட்டாட்சியர் ச. நிறைமதி, குன்னம் வட்டாட்சியர் துரை ராஜ், குன்னம் ஒன்றியக்குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். பின்னர் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் பொதுமக்கள் பார்வைக்காக மாலை வரை வைக்கப்பட்டு பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், இசைப்பள்ளி மாண வர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரியலூர் அரியலூர் மாவட்டத்திற்கு வந்த அலங்கார ஊர்தி வாகனங்களை அரியலூர் மாவட்ட எல்லையில் அரிய லூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர்கள் மலர்தூவி வரவேற்றனர். அரியலூர் பேருந்து நிலையத்திற்கு வந்த அலங்கார ஊர்தி வாகனங்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி மலர்தூவி வரவேற்றார். தொடர்ந்து, அலங்கார ஊர்தி வாகனங்கள் அரியலூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தப்பட்டன.