அரியலூர், நவ.26- அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகேயுள்ள பள்ளியிடை கிராமத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட இருளர் இன குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். அப்பகுதியில் உள்ள மேல் வகுப்பி னருக்கிடையே ஏற்பட்ட தகராறு கார ணமாக அப்பகுதியை விட்டு இடம்பெ யர்ந்த இருளர் இன மக்கள் கும்பகோ ணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் நீர்நிலை புறம் போக்குகளில் குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு நீர்நிலை களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறியுள்ளதால், இருளர் இன மக்கள் வசித்து வந்த குடிசைகளை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளியிடை கிராமத்திற்கு வந்தனர். ஆனால் அப்பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்த இருளர் இன மக்கள் தாங்கள் வாழ்ந்த மற்றும் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 4 ஏக்கர் பரப்பளவு இடத்தை மீட்டு தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகளுடன் இணைந்து தாங்கள் வாழ்ந்த இடங்களில் கொடிகளை நட்டனர். மேலும் தங்களுக்கான இடத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.