districts

விருதுநகர் அருகே தனியார் சிமிண்ட் ஆலை குடியிருப்பில் புகுந்து சுமார் 200 பவுன் நகை கொள்ளை?

விருதுநகர், ஜூலை 15- விருதுநகர்  அருகே தனியார்  சிமென்ட்  ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்புக்  குள் புகுந்து  சுமார் 200 பவுன் நகை களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளன.  

விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலையில் உள்ளது தனியார் சிமிண்ட் தொழிற்சாலை.  இதன் வளாகத்திற்குள்ளேயே  துணை  மேலாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர்  குடியிருப்புகள் உள்ளன.

 மேலும், தமிழக  முதல்வர் உள்ளிட்ட முக்  கிய தலைவர்கள் தங்கும் வகையில் விருந்தி னர் மாளிகையும் அங்கு அமைக்கப்பட்டுள் ளது. கடந்த ஜூலை 13 அன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கு தங்கிச் சென்  றார்.  ஆலை வளாகத்தைச் சுற்றிலும் 24 மணி  நேரமும் ஆலைக் காவலர்கள் தீவிர ரோந்துப்  பணியில் இருப்பது வழக்கம்.   மேலும், பல்வேறு இடங்களில் கண்கா ணிப்பு கேமராக்களும் உள்ளன.

இந்நிலையில் ஆலையின் மெக்கானிக் பிரிவு துணை பொது மேலாளராக பணி புரிந்து வரும் பாலமுருகன் மற்றும் நிர்வாக  பிரிவு துணைப் பொது மேலாளரான இராமச்சந்திரன் ஆகியோர் சனிக்கிழமை வெளியூருக்கு சென்றுள்ளனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், ஆலையைச் சுற்றியுள்ள பலத்த பாதுகாப்பு  வளையத்தையும் தாண்டி, இருவரின் வீட்  டின் கதவுகளையும் உடைத்து  புகுந்துள்ள னர்.  மேலும் வீட்டின் உள்ளே இருந்த பீரோக்  களை உடைத்து அதிலிருந்த தங்க நகை கள் மற்றும் ரொக்கப் பணத்தை கொள்ளை யடித்து சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்து வந்த வச்சக்காரப்பட்டி போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.