இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் மூத்த தலைவர் சக்கரை செட்டியார் நினைவு தின நிகழ்ச்சி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் வடக்கு - 2 ஆம் பகுதிக்குழு சார்பில் நடைபெற்றது. மீனாம்பாள்புரத்தில் உள்ள சக்கரை செட்டியார் படிப்பகம் முன்பு அவரது உருவப் படத்திற்கு பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் பகுதிக்குழு உறுப்பினர்கள், படிப்பக நிர்வாகிகள் கலந்து கொண்டார்.