மதுரை, ஆக. 11- மதுரை மாநகராட்சி 22 ஆவது வார்டு தத்தனேரி - ஆரப்பாளையம் இணைப்பு பாலம் பகுதி அருள்தாஸ் புரம் அருகில் தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்படுகின்றனர். விபத்துக்களும் ஏற்படு கின்றன. இது குறித்து அப்பகுதி யில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கூறுகை யில். போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் அந்த நேரம் அல்லது ஒன்று, இரண்டு நாட்கள் மட்டுமே காலை - மாலை நேரங்களில் சிறிது நேரம் வந்து நின்று விட்டு செல்கிறார்கள். கடந்த சில தினங்களாக போக்குவரத்து காவல்துறை , நெருக்கடி அதிகமாக உள்ள காலை, மாலை,இரவு நேரங்களில் நிற்பதில்லை . இதனால் கடுமையான போக்கு ரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலை அரசு ராஜாஜி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவல கம், மதுரை மாநகராட்சி அலுவலகம் என்று அரசு அலுவலகங்களுக்கு செல்வ தற்கான முக்கிய சாலையாக உள்ளது. மேலும் இஎஸ்ஐ மருத்துவமனை, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பள்ளி மாணவர்கள் சாலையை கடந்து செல்வ தற்கு கடுமையான சிரமம் ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு விடுகிறது .எனவே நிரந்தரமாக இவ்விடத்தில் போக்குவரத்து காவல்துறை யினரை நிறுத்தி போக்கு வரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று வலி யுறுத்தினர்.