திருநெல்வேலி, செப்.18- நாகர்கோவிலில் இருந்து இருந்து நெல்லை வழியாக தினமும் சென்னை தாம்பரம் செல்லும் அந்தி யோதயா விரைவு ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர். இந்த ரயிலில் மொபைல் சார்ஜ் செய்யும் பிளக்குகள் சமீப காலமாக அனைத்து பெட்டிகளிலும் பழுதடைந்து காணப்படுகிறது அவசரத்திற்கு பயணிகள் தங்களது செல்போனை சார்ஜ் செய்யும் போது அது வேலை செய்யாததால் ரயில் பயணிகள் அதிருப்தியில் உள்ளனர். எனவே ரயில்வே துறை தலையிட்டு அனைத்து ரயில் பெட்டிகளிலும் செல் போன்களை சார்ஜ் போடுவதற்கு தோதுவாக புதிய பிளக்கு மற்றும் சுவிட்சுகளை அமைத்து தர வேண்டுமென என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டையில் மயங்கி விழுந்து