districts

img

அறங்காவலர் குழுத் தலைவராக ராம்கோ சேர்மன் பதவி ஏற்பு

திருவில்லிபுத்தூர், செப்.20- திருவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. இந்த கோவி லின் புதிய அறங்காவலர்களாக ராம்கோ  சேர்மன் வெங்கட்ராமராஜா, ராம்குமார் வரதராஜன், ஏ.உமாராணி, டி.நளாயினி, வி.மனோகரன் ஆகியோரை தேர்வு  செய்து தமிழக அரசின் அறநிலையத் துறை அறிவித்தது. அதன் பிறகு அறங்காவ லர்கள் குழுஙக கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் அறங்காவலர் குழுத்  தலைவராக ராம்கோ சேர்மன் வெங்கட்ராம ராஜா தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார்  பதவியேற்பு நிகழ்வில் இந்து அறநிலை யத்துறை இணை ஆணையாளர் கே. செல்லத்துரை, உதவி ஆணையாளர் த. வளர்மதி, நிர்வாக அதிகாரி எம்.கே. முத்துராஜா, வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் எஸ்.ஜவஹர். ஆய்வா ளர் முத்து மணிகண்டன், நகர் மன்றத் தலை வர் தங்கம் ரவி கண்ணன், துணைத் தலை வர் வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்து முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.