தேனி, ஆக.12- மணிப்பூரில் பழங்குடியின பெண் களை நிர்வாணமாக்கி பாலியல்ரீதி யாக தாக்குதல் நடத்திய கொடூரச் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத ஒன்றிய -மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து சனிக்கிழமையன்று தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணவிரதப் போராட்டத்திற்கு பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலை வர் வி.பி. மிதுன் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் வி.பி.மணிமாறன் முன்னிலை வகித்தார். போராட் டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.வெங்க டேசன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் முருகன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் முனீஸ்வரன், சிபிஐ மாவட்டச் செயலாளர் கி.பெருமாள், பார்வர்டு பிளாக் மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் அன்பு வடிவேல், திரா விடர் கழக மாவட்டச் செயலாளர் பூ.மணிகண்டன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் பேசினர். 500க்கும் மேற்பட்டோர் உண்ணாவிர தத்தில் கலந்து கொண்டனர்.