districts

img

பலத்த மழையால் நீண்டநேரம் மின்தடை: சரிசெய்யக் கோரி மக்கள் மறியல்

மதுரை, ஜூலை 11- மதுரையில்  திங்களன்று மாலை பலத்தக்காற்றுடன் மழை பெய்தது. இத னால் பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து மின்இணைப்பு துண்டிக்கப்பட்டன. இதில் தத்தனேரி பாக்கியநாதபுரம் பகுதியில் உள்ள மின்கம்பம் சாய்ந்து  விழுந்ததில் திங்களன்று இரவு முதல் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மின்  கம்பிகள் சாலையில் கிடந்ததால் பொது மக்கள் நடப்பதற்கே அச்சப்பட்டனர். இத னைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் ஆகி யோர் மின்வாரியத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தக வல் கூறினர்.  எந்தவொரு நடவடிக்கையும்  செவ்வாயன்று காலை வரை மின்வாரியம் எடுக்கவில்லை. பல மணி நேரம் மின்சார மின்றி மக்கள் அவதிப்பட்டனர்.  இந்நிலையில் பாக்கியநாதபுரம் பகுதி மக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர் டி.  குமரவேல் ஆகியோர் தத்தனேரி மெயின் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர் பின்னர் அங்கு வந்த காவல்துறையினர், மின்சார வாரிய  அதிகாரிகளை தொடர்பு கொண்டு  உடனடியாக மின் இணைப்பு கொடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் .இல்லையென்  றால் பொதுமக்கள் சாலை மறியலை கை விட மாட்டார்கள் என்று கூறினர். இதைத்  தொடர்ந்து மின் இணைப்புகளை சரி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இதனைத் தொடர்ந்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.