districts

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஜிஎஸ்டி வசூல்  ரூ. 1.50 லட்சம் கோடியை தாண்டியது!

புதுதில்லி, நவ. 1 - நாட்டில் ஜிஎஸ்டி அறி முகப்படுத்தப்பட்ட பிறகு, இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.50 லட்சம் கோடியை கடந்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள் ளது. கடந்த 2022 ஏப்ரல் மாத த்தில் அதிகபட்சமாக ஜிஎஸ்டி ரூ. 1 லட்சத்து 68 ஆயிரம் கோடி அளவிற்கு வசூலானது. அதன்பிறகு, 2022 அக்டோபரில் ரூ. 1 லட்சத்து 51 ஆயிரத்து 718 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ. 26,039 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.  33,396 கோடி, ஒருங்கி ணைந்த ஜிஎஸ்டி ரூ.81,778 கோடி (சரக்குகள் இறக்கு மதி மூலம் வசூலான ரூ. 37,297 கோடி உள்பட) ஆகும். செஸ் ரூ. 10,505 கோடி (சரக்கு இறக்குமதி மூலம் வசூ லான ரூ. 825 கோடியை உள்ளடக்கியது) ஆகும். அக்டோபரில் தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் 25 சதவிகி தம் அதிகரித்து ரூ. 9,540  கோடி ஆகவும், புதுச்சேரி யில் ஜிஎஸ்டி வரி வசூல் 34  சதவிகிதம் அதிகரித்து ரூ. 204 கோடியாகவும் இருந்துள்ளது.

ம.பி.யில் நில அதிர்வு

போபால், நவ. 1 - மத்தியப் பிரதேச மாநி லத்திலுள்ள திண்டோரி, ஜபல்பூர், மாண்ட்லா, அனுப் பூர், பாலகாட் மற்றும் உமாரி யா ஆகிய 6 மாவட்டங் களில் நவம்பர் 1-ஆம் தேதி காலை 8.44 மணியளவில் லேசான நில அதிர்வு உண ரப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோ லில் 4.3 ரிக்டர் அளவு பதி வாகி உள்ளது. ஜபல்பூரி லிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள திண்டோரிக்கு அரு கில் 22.73 டிகிரி வடக்கு அட்ச ரேகை, 81.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 10 கிமீ ஆழத்தில் மையப்பகுதியில் இருந்த எரிமலை ஒன்று  வெடித்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவே நிலநடு க்கத்திற்கு காரணம் என யூகிக்கப்பட்டு உள்ளது.

‘தி வயர்’ ஆசிரியர்களை குறிவைத்த பாஜக அரசு

புதுதில்லி, நவ. 1 - பிரபல இணையதள பத்திரிகையான ‘தி வயர்’ பாஜக-வின் தில்லுமுல்லு களை தொடர்ந்து அம்பலப் படுத்தும் ஊடகமாக உள்ளது. இந்நிலையில், “மெட்டா நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்-ஆப்,  முகநூல், இன்ஸ்டாகிரா மில் பாஜக-வுக்கு எதிரான பதிவுகள் இருப்பதாகக் கரு தினால், அவற்றை நீக்க பாஜக தொழில்நுட்பப் பிரிவு அமித் மாளவியாவுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டு உள்ளது” என்று ஒரு செய்தி யை ‘தி வயர்’ வெளியிட்ட தாகவும், இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது என்றும் அமித் மாளவியா தில்லி  காவல்துறையில் புகார் அளி த்துள்ளார். இதையடுத்து, ‘தி வயர்’ இணைய இதழின் நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், துணை ஆசிரி யர் எம்.கே. வேணு ஆகியோ ரின் வீடுகளில் காவல் துறை யினர் திங்கட்கிழமை சோத னை மேற்கொண்டனர். அவர் களின் கைப்பேசிகள், மடிக் கணினிகள் ஆகியவற்றை யும் பறிமுதல் செய்தனர். அமித் மாளவியா பற்றிய செய்தியை ‘தி வயர்’ ஏற்கெ னவே திரும்பப் பெற்றுவிட்ட நிலையிலும் காவல்துறை இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்   வெடித்தது

திருச்சிராப்பள்ளி, நவ.1 - திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகம்  அருகே கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலைய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில்  30-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  தீ விபத்தின் போது பயன்படுத்துவதற்காக சிலிண்டர் உள்ளிட்ட உபகரணங்கள் இந்த  தீயணைப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருக் கும். இந்நிலையில், செவ்வாயன்று காலை  வழக்கம் போல் அனைவரும் பணியில் ஈடுபட்டி ருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியது. இதில் தீயணைப்பு  நிலைய அதிகாரி சரவணன் மற்றும் தீயணைப்பு வீரர் பிரசாந்த் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.  இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசார ணை நடத்தினர். தீயணைப்புத்துறை அலுவல கத்திலேயே சிலிண்டர் வெடித்த சம்பவம் பகுதி யில் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் மேலப்பாளையத்தில் 4 வீடுகளில் சோதனை

திருநெல்வேலி, நவ. 1- கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் ஏர்வாடி, மேலப்பாளையம் ஆகிய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரி கள் அதிரடி சோதனை நடத்தினர்.  மேலும் சிலரை ரகசிய இடங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி னர்.  இந்த நிலையில் செவ்வாய்க் கிழமை மேலப்பாளையம் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் தலைமை யிலான போலீசார் அங்குள்ள காதர் மூப்பன் தெருவில் சாகிப் முகமது அலி, செய்யது முகமது புகாரி, முக மது அலி, முகமது இப்ராகிம் ஆகிய  4 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை யில் ஈடுபட்டனர். காலை 8 மணி முதல் நடந்த இந்த  சோதனையையொட்டி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பலத்த காவல்துறை பாது காப்பு போடப்பட்டு இருந்தது. அதில்  முகமது இப்ராகிமிடம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய புல னாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அவரது வீடு உள்பட 4 வீடுகளில் காலையில் தொடங்கிய சோதனை சுமார் 4 மணி  நேரம் நீடித்தது. இதில் எந்த வித மான ஆவணங்களும் கைப்பற்றப்பட வில்லை என காவல்துறையினர் தெரி வித்தனர்.

மாநகர பகுதி சபை கூட்டம்: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை,நவ.1- உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டம் நடத்துவதை போல் நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் வார்டு கமிட்டி அமைத்து, வார்டு வாரியாக பகுதி சபை  கூட்டங்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  இந்த நிலையில் நவ.1 அன்று உள்ளாட்சி தினம் கடைபிடிக்கப் படுவதை  யொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பிற் கிணங்க தமிழ்நாடு முழுவதும்  மாநகர, நகராட்சி வார்டு பகுதி களில் பகுதி சபை கூட்டமும், ஊராட்சி பகுதிகளில் கிராம சபை கூட்டங்களும் நடைபெற்றது.  தாம்பரம் மாநகராட்சி, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட பம்மல்  6-வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முதல மைச்சர் பங்கேற்பதாக இருந்தது. ஆனால், அவருக்கு பதிலாக அமைச்சர் கள், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் பங்கேற்றனர். இவர்களுடன் டி.ஆர்.பாலு எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ். நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா, செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத், தாம்பரம் ஆணையாளர் கலந்து கொண்டனர்.

5 கோவில்களில்  நாள் முழுவதும் பிரசாதம் 

சென்னை,நவ.1- சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவில் ஆகிய கோவில் களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.  அதன்படி இத்திட்டத்தினை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செவ்வா யன்று(நவ.1) சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து காணொ லிக் காட்சி மூலமாக மற்றக் கோவில்களி லும் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

திருப்பூர்:  ரூ.400 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் 

திருப்பூர்,நவ.1- உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதி களில் வார்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டங்கள் நடைபெற்றது . இதில்  திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 49 வது வார்டு ஆர்வி., நகர் பகுதியில் நடை பெற்ற சபா கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், செய்தி துறை  அமைச்சர் மு.பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், “அரசு அறிவிக்கும் திட்டங்களை அதி காரிகள் கண்காணிப்பார்கள் என்று  இல்லாமல் மக்களும் அதனை தொடர்ந்து கண்காணித்து அதில் உள்ள குறைகள் மற்றும் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல  வேண்டும். பல்வேறு நலத்திட்டங் களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் , திருப்பூர் மாநகராட்சி யின் மேம்பாட்டுக்காக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட திட்டங்களை மேம்படுத்த சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் தீட்டப்பட்டு தமிழக அரசின் பரிந்துரைக்கு அனுப்பி இருக்கிறது” என்றார்.

அகவிலைப்படியை விரைந்து வழங்குக! முதலமைச்சருக்கு ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை

சென்னை, நவ. 1 - போக்குவரத்து, மின்வாரியம், அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சங்கத்தின் தலைவர் நெ.இல. தரன், பொதுச் செயலாளர் பி.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தின் சுருக்கம் வருமாறு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை பெற நீதிமன்றத்தை நாடினர். 2022 நவம்பர் மாதத்திற்குள் அகவிலைப்படி உயர்வை அரசு வழங்க வேண்டுமென்று உயர் நீதி  மன்றம் உத்தரவிட்டது. அதன்படி, ஓய்வூ தியர்களுக்கு உடனடியாக அகவிலைப் படியினை வழங்க வேண்டும். தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியர்க ளுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்கா மல் வாரியம் நிறுத்தி வைத்துள்ளது. வாரியத்திற்கு தக்க அறிவுரை வழங்கி நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு 1-7-2022 முதல் வழங்க வேண்டிய 4 விழுக்காடு  அகவிலைப்படி உயர்வை அரசு வழங்காமல்  உள்ளது. அதனை உடனடியாக வழங்க வேண்டும். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் ஆகியவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.