தேனி, ஜூலை 12- ஆண்டிபட்டி, சக்கம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த சிறு சலவை பட்டறைகள் செயல்பட தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து கட்சியினர் மற்றும் தொழிலாளர்கள் சார்பில் ஆண்டி பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆண்டிபட்டி- சக்கம்பட்டி நெசவுத் தொழிலை ஒட்டி சிறு சல வைப் பட்டறை தொழில் நடை பெற்று வந்தது. இந்த சலவைப் பட்டறை தொழிலில் ஆயிரத்திற் கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறை முக தொழிலாளர்கள் உள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் வேட்டிகளை சலவை செய்து, அதனை அயனிங் செய்தும், ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும். இந்த நிலையில் இந்த சலவைப் பட்டறையில் இருந்து வெளியே றும் கழிவுநீரில் மாசு ஏற்படுகிறது என்று தனிநபர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதனால் சக்கம்பட்டி பகுதியில் செயல்படும் சலவை பட்டறைகள் செயல்பட தடை விதித்தது. மாசு கட்டுப்பாட்டு வாரியம், மின் வாரியம் மூலமாக சலவை பட்டறைகளில் மின் இணைப்பை துண்டித்தது. இத னால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 20 நாட்க ளுக்கும் மேலாக வேலை இழந்து தவித்து வருகின்றனர்; அரசு, சலவை பட்டறைகள் மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சலவைப் பட்ட றைக்கு அனுமதி வழங்க கோரி அனைத்து கட்சிகள் சார்பில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. அதிமுக சேட். அருணாசலம், திமுக செல்வராஜ், சிபிஎம் மா. தங்கராஜ், காங்கிரஸ் வேல்மணி, பாஜக குமார், சிபிஐ முனீஸ்வரன், விசிக முத்துராமன் உள்ளிட்ட நிர் வாகிகள், தொழிலாளர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டாட்சியர் திருமுரு கனிடம் சலவைப் பட்டறை அவசி யம் குறித்தும், தொழிலாளர் வாழ் வாதாரம் குறித்தும் நிர்வாகிகள் எடுத்து கூறினர்.