districts

img

புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு

தூத்துக்குடி, டிச.12- திருச்செந்தூர் பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்பட பல்வேறு கட்டிடங்களை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் காயல்பட்டிணம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இ சேவை மைய கட்டிடத்தை மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் முன்னிலையில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராம ரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.  இதனைத் தொடர்ந்து சீர்காட்சி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தும் பல்வேறு முடிவுற்ற கட்டிட பணிகள் மற்றும் மியா காடுகள் வளர்ப்பு திட்டத்தின்கீழ் மரக்கன்றினை நட்டி வைத்து அதற்கான தண்ணீர் தொட்டியை அமைச்சர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோட்டாச்சி யர் கோகிலா, திருச்செந்தூர் வட்டாச்சியர் சுவாமிநாதன், காயல்பட்டிணம் நகராட்சி ஆணையர் சுகந்தி, உடன்குடி யூனியன் தலைவர் பாலசிங், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

;