மதுரை, ஆக.6- தமிழ்நாடு நெடுஞ்சா லைத்துறை சாலை பணியா ளர் சங்கத்தின் 8 ஆவது மதுரை மாவட்ட மாநாடு ஞாயிறன்று மாவட்ட தலை வர் த.மனோகரன் தலை மையில் நடைபெற்றது. மாவட்ட இணைச் செய லாளர் ப.பால்ராஜ், ப.சந்தி ரசேகர் முன்னிலை வகித்த னர். முன்னதாக மாநகராட்சி அருகில் உள்ள அம்பேத்கர் சாலையில் இருந்து நெடுஞ்சாலைத்துறை அலு வலகம் வரை கோரிக்கை பேரணி நடைபெற்றது. அமைப்பு கொடியினை மாவட்டத் தலைவர் த. மனோகரன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் க. நீதி ராஜா அரசு ஊழியர் சங்க கொடியை யும், அகில இந்தியா அரசு ஊழியர் சங்க கொடியினை சங்கத்தின் மாநில பொருளா ளர் இரா. தமிழ் ஆகியோர் ஏற்றி வைத்தனர். மாவட்ட துணைத் தலைவர் வா. மாரியப்பன் வரவேற்று பேசினார், துணைத் தலை வர் மு.ரவிச்சந்திரன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் துணைத் தலைவர் இராஜமாணிக்கம் துவக்கி வைத்து பேசினார், வேலை அறிக்கையை மாவட்ட செய லாளர் வே. சோலையப்பன், வரவு - செலவு அறிக்கை யை பொருளாளர் நா. முரு கன் ஆகியோர் சமர்ப்பித்த னர் .தோழமைச் சங்க நிர்வா கிகள் வாழ்த்திப் பேசினர். மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் சிறப்பு ரையாற்றினார். மாநில பொருளாளர் இரா.தமிழ் நிறைவுரையாற்றினார். மாநிலச் செயற்குழு உறுப்பி னர் வீ. மணிமாறன் நன்றி கூறி னார்.
ர். சாலைப்பணி யாளர் களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அரசாணை வெளியிட்டு அரசு அறி வித்திட வேண்டும். சாலை பணியாளர்கள் அனை வருக்கும் சீருடை மற்றும் சலவை படி வழங்கிட வேண் டும். சாலை பணியாளர் களுக்கு ஊதியத்தில் 10 சத வீதம் ஆபத்து படி வழங்க வேண்டும், சாலை பணியா ளர்கள் ஒட்டுமொத்த முதல் நிலை பட்டியல் தமிழ்நாடு சார்நிலை பணியமைப்பு விதிமுறைகள் அடிப்படை யில் முறைப்படுத்தி வெளி யிட வேண்டும். சாலை பணியாளர் களுக்கு தொழில் நுட்ப கல்வி திறன் பெறாத ஊழி யர்களுக்கு தர ஊதியம் மாற்றத்தை முறைப்படுத்தி வழங்கிட வேண்டும், சாலை பணியாளர்களின் இறந்தோரின் வாரிசு களுக்கு அதே துறையி லேயே விரைந்து நிபந்தனை யின்றி பணி வழங்க வேண் டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட் டன. புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வா கிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட னர். தலைவராக வீ.மணி மாறன், செயலாளராக த. மனோகரன், பொருளாள ராக ந.முருகன், துணைத் தலைவர்களாக பி.மாணிக் கம், மு.ரவிச்சந்திரன், இணைச்செயலாளர்களாக வே.சோலையப்பன், வா. மாரியப்பன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.