districts

img

ஊதிய நிலுவை வழங்காத நிர்வாகம்

சென்னை, அக். 26 - ஊதிய உயர்வு நிலுவை கேட்டு  வியாழனன்று (அக்.26) மின்வாரிய தலைமை அலுவலக வாயிலில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர்கள் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். ஊதிய நிலுவை தொகை வழங்க  வேண்டும், 1.12.2019 க்கு பிறகு பணி யில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பேருக்கு 6 விழுக் காடு ஊதிய உயர்வு வழங்க வேண் டும், பண்டிகை காலம் நெருங்குவதை யொட்டி போனஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், டான்ஜெட்கோ உற்பத்தி, விநியோகம், பசுமை  மின்சாரம் என மூன்று நிறுவனங்க ளாக பிரிக்கக் கூடாது. ஆரம்பகட்ட காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும், இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும், வாரிய ஆணை-2ஐ ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் அமைப்பின் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அப்போது மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் செய்தியாளர்களிடம் கூறியதா வது:- ஊதிய ஒப்பந்தம் கடந்த மே  மாதம் கையெழுத்தானது. 1.12.2019  முதல் கணக்கிட்டு ஜூலை மாதத்திற் குள் நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 5 மாதங்கள் கடந்தும் வழங்காமல் உள்ள நிலுவை தொகையை வழங்க  வேண்டும். வாரியத்தில் முழுக்க முழுக்க ஒப்பந்த முறையை புகுத்தும் வகையில் 23 வட்டங்களில் இ-டெண்டர் முறை கோரப்பட்டுள்ளது. அதை ரத்து  செய்ய வேண்டும். நிரந்தரத் தன்மை வாய்ந்த பணி களில் ஒப்பந்த முறையை கூடாது என்று  அரசாணை வெளியிட்டு விட்டு, அதை அரசே மீறுகிறது. வாரியத் தில் பல்லாண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள், 5  ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேங்மேன் கள் இருந்தும் காலிப்பணியிடங்களை நிரப்ப மறுக்கின்றனர். எனவே, 32 ஆயிரம் ஆரம்ப கட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பிரிவு அலுவலகங்களை பராமரிக்கும் 600க்கும் மேற்பட்ட உதவி  பொறியாளர், கணக்கு பிரிவு இள நிலை உதவியாளர் பணியிடங்களை  நிரப்ப வேண்டும். காலிப்பணியிடங் கள் ஏராளமாக இருந்தபோதும், வாரியம் 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. எனவே,  போனஸ் வழங்குவதற்கான பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ெஜய்சங்கர் தலைமை யில் நடைபெற்ற இந்த போராட்டத்தில்  சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன், துணைப் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன், மத்திய அமைப் பின் பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். இந்தக் கோரிக்கைகளை வலி யுறுத்தி மாநிலம் முழுவதும் மேற் பார்வை பொறியாளர் அலுவல கங்கள் முன்பு மத்திய அமைப்பினர் மாலை நேர ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.