மதுரை, செப்.13- மதுரை மாநகராட்சி 21-வது வார்டு மேலவைத்தி யநாதபுரம் நான்கு ரோடு சந்திப்பில் மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூ.5 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் திங்க ளன்று துவக்கி வைத்தார். நிகழ்வில், மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், துணை மேயர் தி.நாக ராஜன், ஆணையாளர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டலத் தலைவர் சர வண புவனேஸ்வரி, மாமன்ற உறுப்பினர்கள் டி. குமர வேல், கே.பி.கஜேந்திரன், சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் ராமலிங் கம், மாநிலக்குழு உறுப்பி னர்கள் எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், வடக்கு - 1 ஆம் பகுதிக் குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.