தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் திங்களன்று தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற தொழில்துறை நிறுவனங்களுக்கான 430 சதவிகிதம் உயர்த்திய நிலைக் கட்டணத்தை திரும்ப பெறுவது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு வழங்கப்பட்டது.