districts

மதுரை முக்கிய செய்திகள்

இராமநாதபுரத்தில்  அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜூலை 28- தேர்தல்கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் எம்.முருகேஸ்வரி தலைமை வகித்தார்.  நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மண்டல செயலாளர்  சி. வல்லரசு  பேரணியை துவக்கிவைத்து உரையாற்றினார்.  மாவட்ட செயலாளர் பெ.சேகர் விளக்கவுரை ஆற்றி னார். பல்வேறு சங்க நிர்வாகிகள் ஆதரித்துப் பேசினர். மாவட்ட பொருளாளர் அப்துல் நஜ்முதீன் உட்பட 300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி :  தேனியில் இருவர் கைது

தேனி, ஜூலை 28-  அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.12.90 லட்சம்  மோசடி செய்த 2 பேரை தேனி மாவட்ட குற்றப்  பிரிவு காவல்துறையினர்  கைது செய்தனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே , சோலைத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி ஜெயா(48). இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த ஜோதிடர் முருகன்(56) என்பவர் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம், தெருகம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்(60) என்பவர் அறிமுகமாகியுள்ளார். ராஜேந்திரன் தனக்கு சென்னையில் சில அரசு உயரதிகாரிகளுடன் தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் மூலம் ஜெயாவின் மகன் முத்தமிழ்ச்செல்வனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய ஜெயா, ராஜேந்திரனிடம் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதற்கு முன்பணமாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். பின்னர், ராஜேந்திரன் ஜெயாவை சென்னைக்கு வரவழைத்து அங்கு, ஆவடியைச் சேர்ந்த ராஜாராம்(53) என்பவரை அவருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். ராஜாராம் மூலம் முத்தமிழ்ச்செல்வனுக்கு வேலை வாங்கித் தருவதற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும், இதற்கு மேலும் ரூ.7.90 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் ஜெயாவிடம் ராஜேந்திரன் கூறினாராம். இதன்படி, ராஜாராமின் வங்கிக் கணக்கிற்கு ஜெயா ரூ.7.90 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் ராஜேந்திரன், ராஜாராம் ஆகியோர் வேலை வாங்கித் தராமலும், பணத்தை திரும்பத் தராமலும் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது., இது குறித்து கடந்த 2022, டிசம்பர்  31 ஆம் தேதி தேனி மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் ஜெயா புகார் அளித்தார். இந்தப் புகாரின் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்து தனிப் படை அமைத்து ராஜேந்திரன், ராஜாராம் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில், சென்னையில் ராஜேந்திரனை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், ராஜேந்திரன் ஜெயாவிடம் பெற்ற பணத்தில், சோலைத்தேவன்பட்டியைச் சேர்ந்த ஜோதிடர் முருகனுக்கு கமிஷனாக ரூ.3 லட்சம் கொடுத்ததாக கூறினார். இதன் அடிப்படையில் முருகனை போலீஸôர் கைது செய்தனர். ராஜாராமை தேடி வருகின்றனர்.

தேனியில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சிறப்பு பயிற்சி 

தேனி ,ஜூலை.29- டிஎன்பிஎஸ்சி தொகுதி தேர்வு எழுதுபவர்களுக்கு வல்லுநர்களை கொண்டு சிறப்பு பயிற்சி நடைபெறும் என  தேனி  ஆட்சியர் ஷஜிவனா அழைப்பு விடுட்டுள்ளார் . இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் 2023ம் ஆண்டிற்கான ஆண்டுதிட்ட நிரலின்படி  தொகுதி 1 மற்றும் தொகுதி 2  ஆகிய போட்டித் தேர்வுகளுக்கான  அறிவிப்பு ஆகஸ்ட் 2023 மாதம்  வெளியிடப்பட உள்ளது. எனவே டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 1 மற்றும்  டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 2 முதல்நிலை தேர்வு மற்றும்  டி.என்.பி.எஸ்.ஸி குரூப் 4  தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் சிறந்த வல்லுனர்களைக் கொண்டுநேரடி பயிற்சி வகுப்புகள்  துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 6379268661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி : இராமநாதபுரம் ஆட்சியர் அறிவிப்பு

இராமநாதபுரம்,ஜூலை 28-  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  கூறியிருப்பதாவது: தமிழ்வளர்ச்சித்துறையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கை அறிவிப்பு எண். 17., நாள் 31.08.2021இன்படி  ‘நாட்டிற்காகப் பாடுபட்ட தலை வர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்த மிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப் gட்டுள்ளது.   தற்போது 2023-2024ஆம் நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி 01.08.2023 அன்றும், முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் பிறந்தநாளையொட்டி 02.08.2023 அன்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து  கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் இராமநாத புரம் சுவாட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தனித் தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை மதுரை மண்டல கல்லூரிக்கல்வி இணை இயக்குநரும், பள்ளி மாணவர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலரும் தெரிவு செய்து அனுப்புவர். போட்டிக்கான தலைப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும், பள்ளி மாணவர்க ளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.  கல்லூரிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்க ளுக்கு பரிசுத்தொகை    வழங்கப்பட  உள்ளது.  மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் போட்டியில் மட்டும் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாண வர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறும். இவ்வாறு அதில்  தெரிவித்துள்ளார்.

நீர்ப் பாசன சங்க தேர்தல் வாக்காளர் சேர்ப்பு சிவகங்கை ஆட்சியர் அறிவிப்பு

 சிவகங்கை,ஜூலை 28- விவசாயிகள் நீர்ப்பாசன அமைப்பு முறை மேலாண் மைச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 7/2001) படி சிவகங்கை மாவட்டம், சிவகங்கை, காளையார்கோவில், மானாமதுரை, திருப்புவனம் மற்றும் இளையான்குடி வட்டங்களில் விடுபட்ட நீர்வள, நிலவள திட்டங்களின் (TNIAMP, IAMWARM,WRCP) கீழ் நீர்வளத்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் நில உடைமையாளர் பட்டியலின் அடிப்ப டையில் தயார்செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல்  அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாசனதாரர்கள் பார்வைக்காக தற்போது முதல் இருவார காலம் வைக்கப்பட்டிருக்கும். அச்சமயம் பாசனதாரர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து கொள்ளும்படியும், பெயர் இடம்பெறாதவர்கள் பெயர் சேர்ப்பதற்கான படிவத்தை பூர்த்திசெய்து அத்துடன்  அதற்கு தேவையான ஆவணத்தை கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுக்குமாறும்  தெரிவிக்கப்படுகிறது. மேலும், பெயர் சேர்ப்பதற்கு மறுப்பு தெரிவிக்க விரும்புவோர் மற்றும் பெயர் நீக்க விரும்புவோரும் அதற்கான படிவத்தை பூர்த்திசெய்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் உரியகாலத்திற்குள் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வாக்காளர் பட்டியலை முழுமையாக சரிசெய்ய ஏதுவாக அதற்கான கீழ்க்கண்ட படிவங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.