விருதுநகர், ஜூன் 18- ஒன்றிய பாஜக அரசு, ஆன்-லைன் மூலம் மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்திட வேண்டும் என்று வலியுறுத்தி விருதுநகரில் நடைபெற்ற மருந்து வணிகர்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகர் மாவட்ட மருந்து வணி கர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மாயக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம் கணேசன் மூர்த்தி, புரவலர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில நிர்வாகிகள் வேங்கடசுந்தரம், ஜான் பிரிட்டோ, குப்தா கோவிந்தராஜ் சோலை சிவம் ஆகியோர் விளக்கிப் பேசினர். மருந்து கட்டுப்பாட்டுத்துறை உதவி இயக்குனர் இளங்கோ, ஆய்வாளர் பால முருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி னர். முடிவில் மாவட்ட பொருளாளர் செல் வம் நன்றி கூறினார். இதில் ஏராளமா னோர் பங்கேற்றனர்.