districts

img

மலைக்கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க திமுக கோரிக்கை

கடமலைக்குண்டு, ஏப்.3- தேனி மாவட்டம், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய  தி.மு.க சார்பில் மயிலாடும்பாறை தனியார் மண்டபத்தில் பூத் முகவர்கள் மற்றும் கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.  கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். செயலாளர் வக்கீல் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக  ஒன்றிய துணை செயலாளர் தேசிங்கு ராஜன் மாவட்ட பிரதி நிதி மாடசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், மச்ச  காலை, சிலம்பரசன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து  கொண்டனர். கூட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிக  அளவில் சேர்ப்பது மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல கடமலை-மயிலை ஒன்றியத்தில் மலைக் கிராம பொதுமக்களை வனப்பகுதியில் இருந்து வெளி யேற்ற வனத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவ டிக்கைகளை எடுத்து வருகின்றனர். மக்களின் வாழ்வா தாரத்தை பாதுகாக்கும் வகையில் மேகமலை வருவாய் கிராமத்திற்கு கட்டுப்பட்ட மற்றும் வன வட்டார பகுதி யில் கட்டுப்படாத 55 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை முறை யாக அளவீடு செய்து வருவாய்துறை வசம் ஒப்படைக்க  தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதே போல கடமலைக்குண்டு கிராமத்தில் கடமலை- மயிலை வடக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற கூட் டத்திற்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி தலைமை தாங்கினார். இந்த இரண்டு கூட்டங்களின் முடிவில் கட்சி நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பம் வழங் கப்பட்டது.