திருநெல்வேலி, ஆக.23- நெல்லை மாவட்டத் தைச் சேர்ந்த 18 வயதுக்குட் பட்டவர்கள், 2023-ஆம் ஆண்டுக்கான பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருதிற்கு இம்மாதம் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக் கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது-சமுதா யத்தில் விளையாட்டு, சமூக சேவை, அறிவியல் தொழில்நுட்பம், கலை - பண்பாட்டில் சிறந்த பங்க ளிப்புகளை ஆற்றிய 18 வயதிற்குள்பட்ட குழந்தைக ளுக்கு பிரதமரின் ராஷ்டிரிய பால புரஸ்கார் விருது வழங் கப்படுகிறது. அதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கு வழங்கப் பட வுள்ள இவ்விருதிற்கு தகுதியானவர்கள் தங்க ளைப் பற் றிய விவரங்களு டன் இம்மாதம் 31-ஆம் தேதிக்குள் www.awards. gov.in என்ற இணைய தளம் மூலமாக உரிய ஆவ ணங்களுடன், விண்ணப் பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.