நாகர்கோவில், செப்.24- நாகர்கோவிலில் குமரி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக் கப்பட்டு வரும் ரவுண்டா னாவில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை போற்றும் வகையில் நினைவு ஸ்தூபி அமைத்திட கேட்டு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குமரி மாவட்ட குழு சார்பில் சனி யன்று (செப்.24) மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட் டத்திற்கு ஷாஜன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ரெதீஷ், எட்வின் பிறைட், விஷ்ணு முன்னாள் மாவட்ட செயலாளர் என்.எஸ்.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.