districts

img

வெளி மாநில இறக்குமதியை குறைத்து தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்க

கடமலைக்குண்டு, செப்.13- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்ப ளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் தோங்காய் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்க ளாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக மரங்களில் தேங்காய் உற்பத்தி அதிகரித்து காணப்படுகிறது. உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை 1 டன் தேங்காய் 26 ஆயிரம் ரூபாய்க்கும் 1 தேங்காய் 12 ரூபாய் வரையிலும் விற்ப னையாகி வந்தது. ஆனால் தற்போது டன் 22 ஆயிரத்திற்கும் 1 தேங்காய் 9 ரூபாய் வரையில் மட்டுமே விற்பனையாகிறது. தொடர்ந்து உற்பத்தி அதிகளவில் காணப் படுவதால் தேங்காய் விலை மேலும் குறையும் நிலை உள்ளது.  உற்பத்தி அதிகரிப்பு ஒருபுறம் இருக்க வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டி ற்கு தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு கார ணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து வெளிமாநில இறக்குமதியை குறைக்க வேண்டும் மேலும் தேங்காய்க்கு நிலை யான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ள னர்.

;