திருநெல்வேலி, டிச 8- நெல்லை வண்ணார் பேட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தாலுகா குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகளுக்கு அதிக அளவு வைப்புத் தொகை மற்றும் வாடகை நிர்ணயம் செய் துள்ளதை குறைக்க வேண்டும். ஏற்கெனவே கடை நடத்திய வர்களுக்கு, புதிய கடைகள் வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்’ போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி வண்ணா ரப்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாளையங் கோட்டை தாலுகா கமிட்டி செய லாளர் துரை தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் பூ.கோபா லன் முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து உள்ளாட்சி கடை வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் ஏ.ஜே.எம். சாலமோன் விளக்கவுரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.ஜி. பாஸ்கரன் நிறைவு உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மேலப்பாளையம் பகுதி செயலா ளர் குழந்தைவேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கு.பழனி, ஆர்.முருகன் மற்றும் ரவி சண்முகம், வழக்கறிஞர் முபாரக் அலி, ஜெயபால், செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.