தேனி, நவ.9- சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப் படை வசதிகள் குறித்த முன்னேற்பாடு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் தேக்கடி யில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா, இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷீபா ஜார்ஜ் ஆகியோர் தலைமையில் வியாழ னன்று நடைபெற்றது. கூட்டத்தில், கார்த்திகை முதல் நாள் முதல் மகரஜோதி வரை ஐயப்பன் கோவில் வழிபாட்டிற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் என்பதால் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பிரவீண் உமேஷ் டோங்கரே, துணை காவல் கண்காணிப்பாளர் மது குமாரி, இடுக்கி காவல் கண்காணிப்பாளர் குரியாகோஷ், மாவட்ட வன அலுவலர் (கோட்டயம்) ராஜேஸ், இடுக்கி வட்டார போக்குவரத்து அலுவலர் நசீர், உதவி கள இயக்குநர் (பெரியார் புலிகள் காப்ப கம்) சுகைப், உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, உத்தம பாளையம் வட்டாட்சியர் சந்திரசேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.