விருதுநகர், செப்.19- விருதுநகரில் தோழர் கே.திரு ஞானம் நினைவரங்கில் சிஐடியு- அரசுப் போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் 26-ஆவது ஆண்டுப் பேரவை நடைபெற்றது. பேரவைக்கு மண்டலத் தலைவர் ஏ.சுந்தரராஜ் தலைமை வகித்தார். பி.சின்னத்தம்பி சிஐடியு கொடியை ஏற்றி வைத்தார். எம்.முத்துராஜ் வர வேற்றார். அஞ்சலி தீர்மானத்தை கே.ஜீவானந்தம் முன் மொழிந்தார். சம்மேளன துணைப் பொதுச் செய லாளர் கனகசுந்தர் துவக்கி வைத்து பேசினார். வேலை அறிக்கையை எம்.வெள்ளைத்துரை, வரவு-செலவு அறிக்கையை எம்.கார்மேகம் ஆகி யோர் சமர்ப்பித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். சம் மேளன உதவித் தலைவர் வி. பிச்சை நிறைவுரையாற்றினார். ஏ. பாண்டித்துரை நன்றி கூறினார். இதில் ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பேரவையில், மண்டலத் தலைவ ராக ஏ.சுந்தரராஜ், பொதுச் செய லாளராக எம்.வெள்ளைத்துரை, பொருளாளராக எம்.கார்மேகம், உதவித் தலைவர்களாக ஜி.வேலுச் சாமி, எம்.மகாலட்சுமி, எம்.முத்து ராஜ், டி.சன்னாசி, எஸ்.விஜயகுமார், கே.தமிழரசன், ஆர்கண்ணன், எம்.முத்துச்சரவணன், எம்.முத் தமிழ்செல்வன் ஆகியோரும், செய லாளர்களாக சி.பெரியசாமி, எம்.முனீஸ்வரன், கே.ரமேஷ்பிரபு, பி. வீரராகவன், ஜி.திருப்பதி, என்.சர வணன், ஜி.ராஜா, பி.செல்வக் குமார், கே.ஜீவானந்தம் ஆகியோர் உட்பட 65 பேர் கொண்ட நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது. தமிழக அரசு, அரசுப் போக்கு வரத்து துறையின் வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகை யை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்சன் திட்டத்தை வழங்க வேண்டும். மழைக்காலம் துவங்க உள்ளதால் பேருந்தின் மேற்கூரை, கண்ணாடி துடைப்பான், முகப்பு விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். ஓய்வு பெற்ற நாளிலேயே தொழி லாளர்களுக்கு பணப் பலன் களை வழங்கிட வேண்டும். புதிய தொழிலாளர்களை காலியிடங்க ளில் நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் பேரவையில் நிறைவேற்றப்பட்டன.