districts

மதுரை சிபிசிஐடி உதவி ஆணையாளர் மீது நடவடிக்கை கோரி வழக்கு

மதுரை, ஆக. 8- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதால் மதுரை சிபிசிஐடி உதவி ஆணையாளர் மீது நட வடிக்கை எடுக்க உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவர் உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகர காவல்துறையில் ஆய்வாளராக பணி யாற்றிய ஜஸ்டின் பிரபாகர் 2006 ஆம்  ஆண்டு தல்லாகுளம் காவல்நிலை யத்தில் பணிபுரிந்த போது என் மீது  பொய்யான வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில் மதுரை மாவட்ட நீதி மன்றம் என்னை விடுவித்தது. அத னைத்தொடர்ந்து திடீர்நகர் காவல் நிலையத்தில் ஜஸ்டீன் பிரபாகர் தூண்டுதலின் பேரில் 2006 ஆம் ஆண்டு  மேலும் ஒரு பொய் வழக்கில் என் மீது  வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று 2012 ஆம் ஆண்டு எல்லா  வழக்குகளில் இருந்தும் நீதிமன்றம் என்னை விடுதலை செய்தது. இருப்பி னும் தொடர்ந்து காவல் அதிகாரியான  ஜஸ்டின் பிரபாகர் என்மீது பழிவாங்கும் உணர்வுடன் இருக்கிறார். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி காவல் ஆணையராக ஜஸ்டின்  பிரபாகர் நியமிக்கப்பட்டார்.

2011 ஆம் ஆண்டு திருப்பாலை கிராமத்தில் சம்பத் என்பவரிடமிருந்து வீட்டுமனை ஒன்றை ஜஸ்டின் பிரபாகர்  வாங்கி உள்ளார். அதற்கு வீட்டு உப யோகத்திற்கு என மின் இணைப்பு பெற்று, மதுரை மாநகராட்சியில் எந்த வித அனுமதியும் பெறாமல் வீடு கட்டி யுள்ளார். அதேபோல 2019 ஆம் ஆண்டு  கான்சாபுரம் பகுதியில் 3ஏக்கர் 53  சென்ட் இடமும், அதே போல 3ஏக்கர் 43  சென்ட் நிலமும், 3 ஏக்கர் 74 சென்ட் நிலம்  தனித்தனியாக மொத்தமாக 10 ஏக்கர்  70 சென்ட் இடத்தை பதிவு செய் துள்ளார். காவல் அதிகாரியான ஜஸ்டின் பிரபாகர் 1964 இன் படி காவலர் நடத்தை  விதிகளை மீறி அசையும் மற்றும் அசையா சொத்துக்களை தன் பெயரி லும், குடும்பத்தினர் பெயரிலும் வாங்கி குவித்துள்ளார். இவை ஊழல்  செய்து வாங்கப்பட்ட சொத்துக்கள் ஆகும். காவல் அதிகாரியான ஜஸ்டின்  பிரபாகர் உண்மையான சொத்து விவ ரங்களை காவல்துறை விதிமுறை களின் படி சமர்ப்பிக்கவில்லை.  எனவே சட்டவிரோதமாக ஊழல் செய்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்து காவல் அதிகாரி யான ஜஸ்டின் பிரபாகர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்துள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை செவ்வாயன்று நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி, மனுதாரர் புகார் குறித்து தமிழக உள்துறை செயலர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலை வர் ஆகியோர் தரப்பில் விரிவான பதில்  மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று  உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.