districts

img

தேனி அருகே ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து பெண் பலி; நோயாளி உட்பட 3 பேர் காயம்

தேனி ,நவ.19- தேனி மாவட்டம் கம்பத்தி லிருந்து மேல் சிகிச்சைக்காக நோயாளியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் தேனி அருகே கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் பெண் பலி யானார். நோயாளி உட்பட மூன்று பேர் படுகாயம டைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி யைச்  சேர்ந்த தாள கருப்பத் தேவர் மகன் மணி. இவர் உடல்நலக்குறைவு காரண மாக கம்பம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் சனிக்கிழமை அதிகாலை  மேல் சிகிச்சைக் காக தேனி அரசு மருத்துவ மனைக்கு 108 ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டார் .ஆம்புலன்சில் மணியின் மகள்கள் விஜயா,ஜெயா மற்றும் தொழில்நுட்ப உதவி யாளர் ராஜா ஆகியோர் சென்றுள்ளனர். வீரபாண்டி புறவழிச் சாலையில் வேலம்மாள் பள்ளி அருகே ஆம்புலன்ஸ் வந்த போது சாலையின் ஓரத்தில் இருந்த குத்து கல்லில் மோதி  கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஜெயாவிற்கு நெற்றியில் ரத்தக்காயம் ஏற்பட்டு சம்ப இடத்திலேயே பலியானார். நோயாளி மணி தலையில் காயத்துடனும், விஜயா, தொழில்நுட்ப உதவியாளர் ராஜா ஆகியோர் காயத்து டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.