துச்சேரி,ஜூன்.13- புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவ சாயிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப் படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் மூலம் உயர் ரக நெல், பாரம்பரிய நெல், கரும்பு, மணிலா, எள், பயறு வகைகள், பருத்தி, சிறுதானிய பயிர்கள் மற்றும் தீவன புல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களுக்கு உற்பத்தி ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கடந்த 2023-24 ஆம் ஆண்டு சம்பா பருவத்தில் உயர் ரக நெல் சாகுபடி செய்த 4,858 பொது பிரிவு விவ சாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ 5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3.95கோடி , அட்டவணைப் பிரிவைச் சார்ந்த 446 விவசாயிகளுக்கு ஏக்க ருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.29.77லட்சம்.
சம்பா பருவத்தில் பாரம்பரிய நெல் சாகு படி செய்த 96 பொது விவசாயிகளுக்கு ஏக்க ருக்கு ரூ.8 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ 9.72லட்சம் அட்டவணைப் பிரிவைச் சார்ந்த 7 விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.29 லட்சம்.
ஒருங்கிணைந்த விதை உற்பத்தி சான்றளிப்பு திட்டத்தின் மூலம் நவரை மற்றும் சொர்ணவாரி பருவத்தில் விதை உற்பத்தி செய்த 9 விதை உற்பத்தி யாளருக்கு ரூ 1.5லட்சம் ஆக மொத்தம் 5,416 விவசாயிகளுக்கு ரூ. 4.34 கோடி ஊக்கத்தொகை வழங்குவதை முதல மைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தொடங்கி வைத்தார். இந்தத் தொகை ஓரிரு நாட்களில் விவசாயிகளின் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.
இந்நிகழ்ச்சியில் வேளாண் அமைச்சர் தேனி. ஜெயக்குமார், வேளாண் துறை இயக்குநர் வசந்தகுமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.