புதுக்கோட்டை, ஜூலை 25 - புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்தும் 7 ஆவது புத்தகத் திருவிழா ஜூலை 27 அன்று தொடங்கி ஆக. 5 வரை மன்னர் கல்லூரி விளையாட்டுத் திட லில் நடைபெறவுள்ளது.
சனிக்கிழமை காலை தொ டங்கும் புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் சட்டத்துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைக்கின்ற னர்.
மாலை 7 மணிக்கு திரைப்பட இயக்குநர் போஸ் வெங்கட் ‘இளை ஞர்களும் சினிமாவும்’ என்ற தலைப் பில் பேசுகிறார். ஜூலை 28 (ஞாயிற் றுக்கிழமை) அன்று மாலை, ‘எழுத் தென்ப...’ என்ற தலைப்பில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் பேசுகிறார். ஜூலை 29 அன்று மாலை சாத னையாளர்களுக்கு விருதுகளை வழங்கி, மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகிறார். ஜூலை 30 அன்று மாலை மாவட்ட எழுத்தாளர்களைப் பாராட்டி, மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் பேசுகிறார்.
தொ டர்ந்து, ‘தமிழ் ஹைக்கூவின் தடங்கள்’ என்ற தலைப்பில் எழுத் தாளர் மு. முருகேஷ் பேசுகிறார். ஜூலை 31 அன்று மாலை, ‘இசையாய் உலவும் நேற்றைய காற்று’ என்ற தலைப்பில் மதுக்கூர் ராமலிங்கம், ‘கவியரங்க அனுபவங் கள்’ என்ற தலைப்பில் கவிதைப் பித்தன் ஆகியோர் பேசுகின்றனர். ஆக. 1 அன்று மாலை, ‘சமத்து வம் என்னும் கனவு’ என்ற தலைப் பில் எழுத்தாளர் அ. வெண்ணிலா பேசுகிறார். ஆக.2 அன்று மாலை, ‘சிந்துவெளி ஆய்வின் நூற்றாண்டு’ என்ற தலைப்பில் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன், ‘புதுக்கோட்டை என்னும் புகழ்க்கோட்டை’ என்ற தலைப்பில் கவிஞர் தங்கம்மூர்த்தி ஆகியோர் பேசுகின்றனர்.
ஆக. 3 அன்று மாலை, ‘போர் முனை முதல் தெருமுனை வரை’ என்ற தலைப்பில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு விஜயகுமார், ‘புத்த கங்கள் கட்டமைக்கும் பண்பாடு’ என்ற தலைப்பில் எஸ்.சுப்பையா ஆகியோர் பேசுகின்றனர். ஆக. 4 அன்று மாலை பேராசி ரியர் கு.ஞானசம்பந்தன் தலைமை யில் பட்டிமன்றம் நடைபெறு கிறது. ஆக. 5 அன்று மாலை நடை பெறும் நிறைவு விழாவில் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநர் ஐ.சா.மெர்சி ரம்யா பேசுகிறார்.
தொடர்ந்து, ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிர மாயிரம் புத்தகங்கள்’ என்ற தலைப் பில் பாடலாசிரியர் சிநேகன் பேசு கிறார். புத்தகத் திருவிழா குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வியாழக்கிழமை அளித்த பேட்டி: பிரபல புத்தக நிறுவனங்களின் சார்பில் 100 அரங்குகள் அமைக்கப் படுகின்றன. குழந்தைகளுக்காக சிறார் நூல்களும், தின்பண்டங் களுக்கான தனி அரங்கும், விளை யாட்டு அரங்கும் இம்முறை அமைக் கப்படுகிறது.
அதிக நூல்களை வாங்கும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு சிறப்பு விருதுகள் தினமும் வழங்கப் படும். கடந்த ஆண்டு ரூ.3 கோடி விற்பனையானது. அதற்கு மேல் நிகழாண்டில் விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். மேலும், மாணவர்களுக்கான பயிலரங்கு கள் பகல் நேரங்களில் நடக்கின்றன. கோளரங்கம் அமைக்கப்படுகிறது. தொலைநோக்கி வழியாக வானி யல் அறியும் நிகழ்வும் தினமும் நடைபெறும் என்றனர்.