districts

img

பொற்பனைக்கோட்டை அகழாய்வில் சூதுபவள மணிகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 24 - புதுக்கோட்டை அருகேயுள்ள பொற் பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், இரு சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் கிடைத்துள்ளன. 

முழுமை பெறாத வடிவத்தில் உள்ள  இந்த மணிகள் கிடைத்துள்ள நிலையில்,  பொற்பனைக்கோட்டை பகுதிக்குள் மணிகள் தயாரிப்புக் கூடம் இருந்திருக் கலாம் என அகழாய்வுத் தள இயக்கு நர் த.தங்கதுரை தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொற் பனைக்கோட்டையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய் வில், கழிவுநீர் வாய்க்கால் போன்ற செங்கல் தளம், வட்ட வடிவ செங்கல்  கட்டுமானம் போன்றவை வெளிப்பட்டன.  மேலும், தங்க மூக்குத்தி, எலும்பு முனைக் கருவிகள் உள்பட 500-க்கும்  மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஜூன்  18 அன்று இரண்டாம் கட்ட அகழாய்வை  முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

சில நாட்களுக்கு முன்பு 4 செம்பு ஆணிகளும், ஒரு அஞ்சனக்கோலும் கிடைத்தன. மேலும், கண்ணாடி மணி கள், பச்சைக் கல் மணிகள், கிரிஸ் டல் மணிகள், அக்கேட், சூது பவளம்,  செவ்வந்திக் கல் என செவ்வாய்க்கிழமை  வரை 470 கண்ணாடி மணிகள் கிடைத் துள்ளன. 

சில நாட்களுக்கு முன்பு 4 செம்பு ஆணிகளும், ஒரு அஞ்சனக்கோலும் கிடைத்தன. மேலும், கண்ணாடி மணி கள், பச்சைக் கல் மணிகள், கிரிஸ் டல் மணிகள், அக்கேட், சூது பவளம்,  செவ்வந்திக் கல் என செவ்வாய்க்கிழமை  வரை 470 கண்ணாடி மணிகள் கிடைத் துள்ளன. 

இதில் ஒரு மணி முழுமை பெற்ற நிலையிலும், மற்றொன்று முழுமை பெறாத நிலையிலும் உள்ளன. இதே போல அக்கேட் வகை மணி ஒன்றும் (நீளம் 0.2 செ.மீ, விட்டம் 0.4 செ.மீ, எடை  0.04 கிராம்) கிடைத்துள்ளது. இது துளை யிடத் தொடங்கி முழுமை அடையாமல்  பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தெரி கிறது.

முழுமையானதாகவும் முழுமை பெறாத நிலையிலும் கிடைத்துள்ள இந்த மணிகள், பொற்பனைக் கோட்டை யில் உள்நாட்டு வணிகம் செழித்திருந்த தையும், மணிகள் செய்வதற்கான தொழிற்கூடம் இதே பகுதியில் இருந்த தற்கான சான்றாகவும் எடுத்துக் கொள்ள லாம்.

கடந்த ஆண்டு உடைந்த நிலையில்  வட்ட வடிவ சூதுபவள மணி ஒன்று கிடைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.