districts

img

கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான சிறப்பு இரவு நேர பாட சாலை

திருச்செங்கோடு, டிச.28-  கல்வி, வேலைவாய்ப்பு தொடர் பான சிறப்பு இரவு நேர பாட சாலை திருச்செங்கோட்டில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ஆனங்கூர் ஊராட்சி, நல்லா கவுண்டம்பாளை யம், பகத்சிங் நகர் பகுதியில் உள்ள சமு தாய கூடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் டாக்டர் அம்பேத்கர் இலவச கல்வி வேலை வாய்ப்பு மையம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு இரவு நேர பாடசாலை வகுப்பு நடைபெற்றது. தீ.ஒ.முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜி.கோபி தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ”அடுத்தது என்ன? ” என்ற தலைப்பில் உயர்கல்வி வாய்ப்புகள் தொடர்பாக காப்பீட்டு ஊழியர்கள் சங்க நிர்வாகி சாந்தி கருத்துரையாற்றினார்.

 இதைத்தொடர்ந்து, ” எதிர்கால வேலைவாய்ப்பு” என்ற தலைப்பில் தீ.ஒ.முன்னணியின் நாமக்கல் மாவட் டத் தலைவர் எம்.கணேசபாண்டியன், அரசு மற்றும் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் தொடர்பாக விளக்கவுரையாற்றினார். இந்நிகழ் வில், தீ.ஒ.முன்னணியின் நிர்வாகிகள் சக்திவேல், நவீன் குமார், ஜீவா, மனோஜ் குமார் மற்றும் அப்பகுதி மாணவ, மாணவியர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;