districts

img

கீழ் மலையில் யானை மிதித்துக் கொன்ற பழங்குடியின இளைஞர் உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி

நாகர்கோவில், மார்ச் 10- கடையால் பேரூராட்சி கீழ் மலையில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது வெள்ளியன்று (மார்ச் 8) மாலை யானை மிதித்து மது என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே மரண மடைந்தார். தகவல் அறிந்ததும் பேரூ ராட்சி தலைவர் ஜூலிட். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ் ஆர் சேகர். ஆகி யோர் சம்பவ இடத்திற்கு சென்று அதி காரி களுக்கு தகவல் கொடுத்ததுடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரி வித்தனர்.

சனியன்று மாவட்ட ஆட்சியரை பேரூராட்சி தலைவர் ஜூலிட், தமிழ்நாடு விவசாயிகள் சங்க த்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.சேகர், செயலாளர் ஆர்.ரவி ஆகியோர் நேரில் சந்தித்து இறந்தவர் குடும்பத்திற்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை பத்து லட்சம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும். இறுதி நிகழ்ச்சிக்கு ரூ.5,000 உடனடியாக வழங்க வேண்டும். தண்ணீர் கிடைப் பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருப்பதற் கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட னர்.

இறுதி நிகழ்ச்சியின்போது அதற்கான பணம் வனத்துறையினர் பேரூராட்சி தலைவர் ஜூலிட், கவுன்சிலர் ரெகு முன்னிலையில் குடும்பத்தினரிடம் வழங்கபட்டது. மது வின் உடலுக்கு முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார் மின். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.